tamilnadu

img

சைனிக் பள்ளியில் சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை

உடுமலை, செப். 20- செப்.26ஆம் தேதியன்று சூரிய கிரகணம் நடை பெற உள்ளது. பழனி, உடுமலை, பொள்ளாச்சி,  கோவை, உதகை ஆகிய பகுதிகளில் நிகழ் வழி தடங்களாகவும், பாலக்காடு பகுதியில் முழு சூரிய கிரகணத்தைக் காணலாம். அன்றைய தினம் சில அபூர்வமான நிகழ்வுகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் சூரிய கிரகண நாளன்று நாம்  என்ன செய்ய வேண்டும் என்று அமராவதி நகர் சைனிக் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் எடுத்துக்கூறப்பட்டது. இதில் புதுதில்லி நேரு கோளரங்கத்தின் இயக்குநர் நந்திவதா கலந்து கொண்டார். அவர் சூரிய குடும்பம் பற்றியும், நடைபெற உள்ள சூரிய கிரகணம் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் சூரிய கிரகணத்தை சாதாரண கண்களால் பார்க்கக்கூடாது என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் குறிப்பாக சன் புரொஜெக்சன் என்று அழைக்கப்படும் கருவி மூலம் மட்டுமே காண வேண்டும் எனவும் கூறினார்.  அத்துடன் அங்கு நிறுவப்பட்டிருந்த சூரிய ஒளி உமிழ் குருவி மூலம் காண்பது தொடர்பாக செய் முறை விளக்கமளித்தார். இதில் சைனக் பள்ளி மற்றும் அருகில் உள்ள பள்ளியின் மாணவ, மாணவிகள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.