tamilnadu

img

சமூக நீதிக்கட்சி நிர்வாகிகள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 3- கோவையில் பஞ்சமி நில மீட்பு  போராட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியு றுத்தியும் செவ்வாயன்று அனைத்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை மாவட்டம், சூலூர் தாலுகா சித்த நாயக்கன் பாளையத்தில் கடந்த வாரம் புதனன்று சமூக நீதி கட்சி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சி யின் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 19 பேரை சூலூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டத்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு விசிக, திவிக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் கழகம், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செய லாளர் சுசி.கலையரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யுகே.சிவஞானம், பியுசிஎல் அமைப்பின் நிர்வாகி வழக்கறிஞர் பாலமுருகன், சிபிஐ(எம்எல்) சார்பில் வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எராளமானோர் பங்கேற்று பஞ்சமி நில ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்று, கைது செய்யப்பட்டுள்ள சமூக நீதிக்கட்சி யிரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.