tamilnadu

img

துப்புரவு தொழிலாளர் காலிப்பணியிடம் பட்டாதாரிகள் குவிந்ததால் அதிர்ச்சி

கோவை, நவ. 27-  கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு தொழிலாளர் காலிப்பணியி டங்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் நேர்காணல் செவ் வாயன்று மாநகராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றதால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி யடைந்தனர். கோவை மாநகராட்சியில் உள்ள மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு,  தெற்கு ஆகிய ஐந்து மண்டலங்க ளில் உள்ள 100 வார்டுகளிலும் 549  துப்புரவு தொழிலாளர் பணியி டங்கள் காலியாக உள்ளது. துப்பு ரவு தொழிலாளர்கள் பற்றாக்குறை யால் குப்பைகளை அள்ளுவது, சுகாதார பணிகளை மேற்கொள்ளு வது போன்ற பணிகளில் தோய்வு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து காலியாக உள்ள துப்புரவு தொழி லாளர்கள் பணிகளுக்கு விண்ணப் பங்கள் மாநகராட்சி சார்பாக வர வேற்கப்பட்டன. தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் மட்டும் போதும்  என கல்வி தகுதி குறிப்பிட்டி ருந்தது.

இந்நிலையில், இப்பணியிடங் களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி மாநகராட்சியில் செவ்வா யன்று மாநகராட்சி ஆணையாளர் சரவன்குமார் ஜடாவத் தலைமை யில் நடைபெற்றது. இதில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும் பாலனோர் பட்டதாரி இளைஞர் களாவர்கள். குறிப்பாக, எம்.இ, எம்.எஸ்.சி, பி.எட் போன்ற முதுநிலை பட்டதாரி இளைஞர்களும் கலந்து கொண்டதால் மாநகராட்சி அதி காரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதி காரி ஒருவர் கூறுகையில், ‘‘ இந்த நேர்காணல் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இதில் விண்ணப்பித்த மனுதாரர்கள் நேர்காணலின் போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். கல்வி  தகுதி தமிழ் எழுதப்படிக்க தெரிந் தால் போதுமானது என்பது மட் டும் தான். ஆனால் இதில் இன்று  முதல் நாளே எம்.இ போன்ற பொறி யியல் உள்ளிட்ட பட்டதாரி இளை ஞர்களும் பங்குபெற்றனர். இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் நடை பெறும் இந்த நேர்காணலில் எத்தனை பட்டதாரிகள் கலந்து கொள்ள போகிறார்கள் என தெரி யவில்லை’ ’என்றார். இதுகுறித்து நேர்காணலில் கலந்துகொண்ட இளைஞர்கள் கூறுகையில், ‘‘மாதம் சம்பளம் ரூ.17 ஆயிரம் முதல் தரப்படுகிறது. படித்துவிட்டு வேலையில்லை, குடும்ப கஷ்டம் என்ன செய்வது என தெரியவில்லை. ஆகை யால் தான் இந்த பணிக்கு விண் ணப்பித்து நேர்காணலில் கலந்து கொண்டோம்,’’என்றனர். இதற்கிடையே தனியார் ஒப் பந்த துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் படிக்க வில்லை, எங்களுக்கு வேலை கிடைக்கும் என தான் இங்கு வந் தோம். ஆனால் இங்கு படித்த பட்ட தாரிகளும் வந்துவிட்டார்கள். இருப்பினும் மாநகராட்சி அதிகாரி கள் எங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்,’’ என தங்கள் தரப்பின் நியாயத்தை கோரிக்கையாக விடுத்தனர்.