tamilnadu

img

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

பொள்ளாச்சி, ஜூன் 1- பொள்ளாச்சியை அடுத்த வால்பாறைபகுதியில்  11 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு  கொடுத்துவந்தநபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை பகுதியில் வசிக்கின்ற கூலித் தொழிலாளியின் மகள்5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமிக்கு வால்பாறையைச் சேர்ந்த ரூபன்(44) தொடர்ந்து பாலியல் தொந்தரவுகொடுத்து வந்ததாகத்தெரிகிறது . இதுதொடர்பாக அச்சிறுமியின்பெற்றோர் வெள்ளியன்று வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இப்புகார் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனியன்று ரூபனை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;