கோவை, ஆக. 4- இலங்கை போதைப் பொருள் கடத்த லாளி அங்கொட லொக்கா வழக்கை விசா ரிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளதாக சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித் துள்ளார்.
இலங்கை போதை பொருள் கடத்தலாளி அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலி ஆவணம் தயாரிப்பு, அங்கொட லொக்கா மரணம், போலி ஆதார் அட்டை மூலம் இந்தியக் குடியுரிமை இருப் பது போல் ஆவணங்கள் தயாரித்தது என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கோவையில் சிபிசிஐடியி னர் மூலம் இவ்வழக்கு தொடர்பான விசா ரணை நடந்து வந்தது. இந்நிலையில், செவ் வாயன்று உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஐ.ஜி. சங்கர் தலைமையில் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் மாடசாமி, சிபிசிஐடி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. சங்கர், அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு வழக்குகள் குறித்து துணை காவல் கண்கா ணிப்பாளர் ராஜூ விசாரணை அதிகாரி யாக நியமனம் செய்யபட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல் விசாரணை நடத்த 7 தனிப்படைகள் நியமிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு கோணங் களில் விசாரணை நடத்தி மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்றார். இதன் பின்னரே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், இவ்வழக்கில் கைது செய்யபட்ட சிவகாமி சுந்தரி, அமானி தாஞ்ஞி, தியானேஷ்வரன் ஆகிய 3 பேரையும் காவல் கண்காணிப்பில் எடுத்து விசாரித்த பின்னரே உறுதியான தகவல் களை சொல்ல முடியும் என்றார்.
மேலும், இன்று (செவ்வாய்) தான் விசா ரணை துவங்கப்பட்டு உள்ளது எனவும் இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின்னரே வழக்கு குறித்த விபரம் தெரியவரும் எனவும் தெரிவித்தார்.