tamilnadu

img

தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கு.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர் திங்களன்று கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மரப்பாலம் ரயில்வே தரைப்பாலத்தை மேம்பாலமாக விரிவுபடுத்தி அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பேன் என உறுதியளித்தார். இந்த பிரச்சார பயணத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் திரளானோர் பங்கேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

;