மத்திய அமைச்சரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்வி
புதுதில்லி, பிப்.10– உரிமம் பெறாமல் ஆன்லைனில் மருந்து கள் விற்பது தொடர்பாக கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப் பிய கேள்விக்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பதில ளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மக்களவையில், ஆன்லைன் மருந்துகள் விற்பனையின் தற்போதைய நிலை என்ன?, நாடு முழுவதிலுமிருந்து வேதியியலாளர்கள், மருந்து கடைக்காரர் கள் அமைப்புகளிலிருந்தும் மற்றும் தனிப் பட்ட மனிதர்கள், யாரிடமிருந்தாவது ஆன் லைன் மருந்து விற்பனையில் சட்ட விரோத மாக மருந்துகள் விற்பது சம்பந்தமாக ஏதே னும் புகார்கள் வந்துள்ளனவா. இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன. ஆன் லைன் மருந்து விற்பனையை, (குறிப்பாக கருக்கலைப்பு மருந்துகள்) வெகு விரைவில் முழுவதுமாக தடை செய்ய அரசுக்கு ஏதா வது திட்டங்கள் உள்ளதா? அப்படியெனில் அதன் விபரங்கள் மற்றும் அது சம்பந்தமாக அரசு எடுத்துள்ள அல்லது எடுக்க இருக் கின்ற நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், அரசு இ -பார்மஸிகள் மூலமாக ஆன்லைன் மருந்துகள் விற்பனை மற்றும் விநியோகம் சம்பந்தமான நெறிமுறைகளை இறுதிப் படுத்தியுள்ளதா, இ-பார்மஸி நெறிமுறை கள் விபரங்கள், அவை எந்த தேதியிலிருந்து இறுதிபடுத்தப்பட்டு, செயல்படுத்துப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பதிலளிக்கையில், மருந்துகள் மற் றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1940 விதிகள் 1945 ன் படியும், மாநில உரிம அதி கார ஆணையத்தின் ஆய்வு, முறையான உரி மங்கள் பெறுதல் போன்றவற்றின் மூலமும் நாட்டில் மருந்துகள் விற்பனை ஒழுங்குப டுத்தப்படுகிறது. இந்த சட்டம் மற்றும் விதி முறைகள் மீறப்படுமேயானால், கடுமை யான நடவடிக்கை எடுக்க மாநில உரிம அதிகார ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மருந்து கள் விற்பனைக்கான இணையங்கள் சில இருப்பதாக காணப்பட்டுள்ளது. அகில இந் திய வேதியியலாளர்கள், மருந்து விற்ப னையாளர்கள் அமைப்பிலிருந்தும், பங்கு தாரர்களிடமிருந்தும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக சில கருத்துக்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆன்லைன் மருந்து விற்பனையை விரிவாக ஒழுங்குபடுத்துவ தற்காக அரசு, ஜிஎஸ்ஆர் 817 (E)/28.08. 2018 ன் மூலம் வரைவு விதிகளை வெளி யிட்டுள்ளது. இது மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் விதிகள் 1945ல் திருத்தங்கள் செய்வதற்காக, பொதுமக்கள் / பங்குதாரர்க ளிடமிருந்து கருத்துக்கள் பெற்று, அதன் மூலம் இ-பார்மஸி மருந்து விற்பனை மற் றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவ தற்காக செய்யப்பட்டது. இந்த வரைவு விதி களில், இ-பார்மஸி பதிவு செய்தல், இ-பார் மஸியை காலமுறையில் ஆய்வு செய்தல், இ-பார்மஸி மூலம் மருந்துகள் விற்பனை மற்றும் விநியோகம் பற்றிய வழிமுறைகள், இ-பார்மஸி மூலம் மருந்துகள் விளம்ப ரத்தை தடை செய்தல், புகார்களை தீர்க்கும் வழிமுறைகள், இ-பார்மஸிகளை கண்கா ணித்தல் ஆகியவற்றிற்கு விதிகள் உள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை சம்பந் தமான பல புகார்கள் நாட்டின் பல உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளன. 17.12.2018 தேதியிட்ட, சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் படி, வரைவு விதிகள் மத் திய அரசால் வடிவமைக்கப்படுவதால், பங் குதாரர்களையும் கவனமாக கருத்தில் கொண்டு, மேற்படி வரைவு விதிகள் அறி விக்கப்படும் வரை, ஆன்லைன் விற்பனை யாளர்கள், தங்களது ஆன்லைன் மருந்து கள், ஒப்பனை பொருட்கள் விற்பனையை தொடரக்கூடாது. இதன்பிறகு, 02.01.2019 தேதியிட்ட ஆணைப்படி, சென்னை உயர் நீதிமன்றம் ,17.12.2018 தேதியிட்ட தனது ஆணையின் பத்திகளை தடை செய்துவிட் டது. மற்றொரு புகார் சம்பந்தமாக தில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில், பதிலளிக்க வேண்டியவர்கள், உரிமம் பெறா மல் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதிலிருந்து தடை செய்யப்படுகிறார் கள். அடுத்த உத்தரவுகள் வரும்வரை, இது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வழிகாட்டி இந்த ஆணை யில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, 08.05. 2019 & 28.11.2019 ஆகிய தேதியிட்ட, கடி தங்கள் வாயிலாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, தில்லி உயர்நீதி மன்ற ஆணைக்கு இணங்கிநடக்குமாறு, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு களை வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.