பள்ளி மாணவி உயிரிழப்பு
பென்னாகரம், ஜூன் 2- பென்னாகரம் அருகே குடும்ப வறுமையின் காரண மாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்த பள்ளி மாணவி டிராக்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நளப்ப நாயக்கன அள்ளி கிராமத் தைச் சார்ந்த முருகன் மற்றும் சின்னபாப்பா ஆகிய தமபதி யருக்கு திவ்யா(14) என்ற மகள் உள்ளார். கொரோனாவினால் ஏற்பட்ட வறுமையி னால் இவர்கள் மூவரும் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை பனைகுளம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் டிராக்ட ரில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு அதியமான் கோட்டை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். டிராக்டரிலிருந்த செங்கலை இறக்க துணையாக முருகன் மகள் திவ்யா மற்றும் இன்னும் சில பணியாளர்கள் உடன் சென்றனர்.
இந்நிலையில், டிராக்டர் எர்ரம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முயற் சித்துள்ளார். இதில், நிலைதடுமாறிய திவ்யா கீழே விழுந் ததில் டிராக்டரின் பின் சக்கரம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பாரப்பட்டி காவல் துறையி னர் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். போதிய வருவாய் இன்றி குடும் பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்ற பள்ளி மாணவி உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.