ஸ்மார்ட் சிட்டி திட்டமா? சீர்குலைக்கும் திட்டமா?
திருப்பூர், பிப். 17 – திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தை நிறைவேற்றுவதாகச் சொல்லி முதலில் பள்ளிக்கூடம், பூ மார்க்கெட் ஆகியவற்றை இடித்த மாநகராட்சி நிர்வாகம் இப்போது நூலகக் கட்டிடத்தை இடிக்கப் போவதாக நோட்டீஸ் வழங்கியுள் ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தினசரி மார்க்கெட் அருகில் 1950ஆம் ஆண்டில் இருந்து 70 ஆண்டு காலமாக இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் கிளை நூலகம் எண் – 3 எனும் இந்த நூலகக் கட்டிடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிப்பதற்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் வாசகர் வட்டத்தின் நிர்வாகிகள் திங்கள்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித் தனர். இதில் பாரம்பரியம் மிக்க கிளை நூலகத்தின் அருகில் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, பழனி யம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் இரு நடுநிலைப் பள்ளிகள், இரு தொடக்கப் பள்ளி கள் செயல்பட்டு வருகின்றன. அதன் மாணவர்கள் இந்த நூலகத்தினை பெரிதும் பயன்படுத்தி வருகின்ற னர்.
இந்த நூலகத்துக்கு அருகி லேயே தினசரி மார்க்கெட், மருத்துவ மனை ஆகியவை உள்ளதால் அங்கு வரும் பொது மக்களும் இந்நூலகத் தினால் பயன்பெற்று வருகின்றனர். நாள்தோறும் 200 வாசகர்கள், 150 நூல்கள் இரவலாகவும், 400 நூல்கள் குறிப்புதவிக்காகவும் பயன்பாட் டில் உள்ளன. இந்நூலகத்தின் உறுப்பினர்கள் 8ஆயிரம் பேர். இங்கு 50 ஆயிரம் நூல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. புரவலர்கள் 70 பேர் உள்ளனர். இந்நூலகத்தை இடம் மாற்றி னால் அன்றாடம் இங்கு வரும் வாச கர்கள் மற்றும் பொது மக்கள் ஏமாற் றம் அடைவார்கள். எனவே 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந் நூலகக் கட்டிடத்தினை இடிப்ப தைத் தவிர்த்து பொது நூலகத் துறைக்கே வழங்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற அக்கட் டடத்தினை வாசகர் வட்டம், பொது நூலகத் துறை மூலமாகவே நவீ னப்படுத்துவதாகவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல் படுத்தப்பட்டால் திருப்பூர் நகர மக்களுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஏழை குடும்ப குழந்தைகள் படித்த பள்ளிக்கூடம் இடிப்பு, பூ மார்க்கெட் அகற்றம், ஏழைப் பெண்கள், சிறு வியாபாரி கள் நம்பி வாழ்க்கை நடத்தும் தின சரி மார்க்கெட்டை இடிக்க ஆயத் தம் என அடுத்தடுத்து பொதுப் பயன் பாட்டுக்கான விசயங்கள் தகர்க் கப்பட்டு வருகின்றன. அதன் அடுத்த கட்டமாக அறிவு வளர்ச் சிக்கு விளக்காகப் பயன்பட்டு வரும் நூலகத்தைத் தகர்க்கவும் மாநக ராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப் பது வாசகர்களுக்கும், நூலக ஆர்வ லர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்ப டுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தீட்டி செயல்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் நலனைப் பற்றி துளியும் அக்கறைப்படாதவர்கள் என்று சொல்வதை விட அதைப் பற்றி குறைந்தபட்சப் புரிதல்கூட இல்லாதவர்களாக, எதையும் லாபம் நோக்கில் கணக்கிடும் தரகர்களைப் போல் செயல்படக்கூடியவர்களாக உள்ளனர் என்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.