சத்தியமங்கலம், மார்ச் 20- கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக தமிழகம் - கர்நா டக இடையே இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்து கள் இயக்குவது நிறுத்தப்பட் டதால் சத்தியமங்கலம் பேருந் துநிலையம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி வரும் பேருந்துகள், ஆம்னி வேன் கள், கார்கள், லாரிகள் என அனைத்து ரக வாகனங்களையும் மாநில எல்லையோரத்தி லுள்ள சோதனைச் சாவடிகளில் பரிசோத னைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வந் தது. இந்நிலையில், வெளிமாநிலப் பயணி களால் ஏற்படும் கொரோனா தாக்கத்தை தடுக்கும் வகையில், தமிழகம் - கர்நாடக இடையே இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளன. இதனால் சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் இருமாநிலப் பயணி களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும், சில தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.