tamilnadu

img

சரவணா செல்வரத்தினம் துணிக்கடைக்கு சீல்

கோவை, மே 29-விதிகளை மீறி கூடுதல் தளங்கள் கட்டியதால் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடை வளாகத்துக்கு நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக புதனன்று சீல் வைத்தனர்.தமிழகத்தின் பிரபலமான துணிக்கடையாகசரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உள்ளது. துணிக்கடையாக செயல்படும் இக்கட்டிடம், தரைத்தளம்மற்றும் 5 தளங்கள் கொண்டது. இங்கு துணி விற்பனை மட்டுமின்றி பல்வேறு வீட்டுஉபயோகப் பொருட்களும், இதில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கிளை கோவை டவுன்ஹால் ஒப்பணக்காரவீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பார்க்கிங் இடத்தை குடோனாக பயன்படுத்தியது, திறந்தவெளிபகுதியை விடாமல் இருந்தது ஆகிய விதிமீறல் இந்த கட்டிடத்தில் இருந்தது. இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் விதிமீறல் காரணங்களுக்காக சீல் வைக்க உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஒப்பணக்கார வீதி சரவணா செல்வரத்தினம் வளாகத்துக்கு உள்ளூர் திட்டக்குழுமம், கோவை  மாநகராட்சி நிர்வாகத்தினர் புதனன்று சீல் வைத்தனர். முன்னதாக, கட்டிடத்திற்கு சீல் வைக்கையில் இந்நிறுவனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கருதி முன்னெச்சரிக்கையாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.