தஞ்சாவூர், ஜூன்16- தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் வெள்ளிக்கிழமை மராட்டிய இலக்கிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நூலக நிர்வாக அலுவலர் மு. இரத்தினச்செல்வி தலைமை வகித்தார். மராட்டி பண்டிதர் பி.இராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக முனைவர் எஸ்.சுதர்சன் வரவேற்றார். நூலக மொழிப் பண்டிதர்கள், வரலாற்றுத் துறை மாணவர்கள், ஆய்வறிஞர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சமஸ்கிருத பண்டிதர் ஆ.வீரராகவன் நன்றி கூறினார்.