தில்லியில் குடியுரிமை திருத்த சட்டதை திரும்ப பெற வலியுறுத்தி போராடிய மக்கள் மீது சங்பரிவார் குண்டர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகரக் குழு சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண நிதியை மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தியிடம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, ஐ.ஞானசெளந்தரி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், கிளை செயலாளர் வி.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.