நாமக்கல், பிப்.11- சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜெய மணி தலைமையில் சேலம் சிறை தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழாவும், தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் க.மு.காளியப்பன் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராமசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் இடைக்கமிட்டி உறுப்பினர் சி.ரங்கசாமி நன்றி கூறினார். திருச்செங்கோடு, சூரியம்பாளையம் கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. நகர குழு உறுப்பினர் ஆர்.நடேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன் கொடியேற்றி வைத்தார். நகர செயலாளர் ஐ.ராயப்பன், ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், கிளை செயலாளர் ஈஸ்வரன், கந்தசாமி, கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் பி.சுரேஷ் கொடி யேற்றி வைத்தார். மூத்த தோழர் பி.பெரிய சாமி, ஒன்றியகுழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், கிளை செயலாளர்கள் பி.கே.ரவி, பி. ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் கே.எஸ்.வெங்கடாசலம் நன்றி கூறினார்.