tamilnadu

img

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலைக்கு சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சீல்

சேலம், ஜூலை 24- சேலம் அருகே அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலைக்கு மாந கராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் முற்றிலு மாக தடை செய்யப்பட்டுள்ளது. சேலத் தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாந கராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நகர்நல அலுவலர் தலைமையில் குழுக் கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் சிவதாபுரம் அருகே உள்ள காட்டூர் பகுதி யில் பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலை இயங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், இரண்டு மிகப்பெரிய கிடங்கு களில் பிரமாண்டமான இயந்திரங்களைக் கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்து வந்தது கண்டு பிடிக்கப்படது. சுமார் 26 டன் அளவிலான கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட் கள், மூட்டை மூட்டையாக அடுக்கி வைக் கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மூலப் பொருட் களையும் மாநகராட்சி அதிகாரிகள் பறி முதல் செய்தனர். பின்னர் 2 கிடங்குக ளுக்கும் சீல் வைத்து, அந்த ஆலைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர்.