tamilnadu

img

தாய்லாந்தில் கொத்தடிமையான இளைஞர் பத்திரமாக மீட்பு

திருப்பூர், ஜூலை 9 – தாய்லாந்து நாட்டில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும் என்று நம்பிச் சென்றவர், அங்கு கொத்தடிமையாக சிக்கிக் கொண் டார். திருப்பூரைச் சேர்ந்த அவரது ஏழை தாயின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாக அங்கி ருந்து அவர் பத்திரமாக தாயகம் திரும்பினார். இவர் திருப்பூர் வந்து சேர்ந்த நிலையில், இவரை மீட்பதற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்ய வில்லை என்று தாயார் குற்றஞ் சாட்டினார். திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் மாரியம் மாள். ஏழை பனியன் தொழிலாளி யான இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த வருடம் ஜனவரி மாதம் மூத்தமகன் மணித்துரை மற்றும் இரண்டாவது மகன் மணி கண்டன் ஆகியோரை, அவிநாசி பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற ஏஜெண்ட் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி னார். அங்கு பனியன் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ரஞ்சித் கூறியதை நம்பி ஒருவருக்கு தலா ரூ.2.70 லட்சம் வீதம் பணம் கொடுத்து அங்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு வேலை செய்வ தற்கான முறையான விசா எடுத்துத் தராமல், உணவகம் ஒன்றில் கொத் தடிமைகளாக வேலை செய்யும் நிலைக்கு மணித்துரை, மணி கண்டன் இருவரும் தள்ளப் பட்டனர். அங்கு வேலை செய்வ தற்கான முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில் அவர்களை சட்டவிரோதமாக வெவ்வேறு இடங்களில் தங்க வைத்து வேலை பார்க்கும்படி செய்துள்ளனர்.

இந்த விபரம் மாரியம்மாளுக்குத் தெரியவந்த நிலையில் தனது மகன் களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வரும்படி ஏஜெண்ட் ரஞ்சித்திடம் வற்புறுத்தி இருக் கிறார். அவர்கள் பணம் கேட்ட நிலையில் ரூ.58 ஆயிரம் செலுத்தி  இரண்டாவது மகன் மணி கண்டனை முதலில் மீட்டு இங்கு  வரவழைத்தனர். முதல் மகன் மணித் துரையை விடுவிக்க வேண்டு மானால் ரூ.58 ஆயிரம் கொடுத் தால்தான் முடியும் என்று தகவல்  மாரியம்மாளுக்குத் தெரிவிக்கப் பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் ஒரு  மகனை மீட்கவே கடன் வாங்கி ஏற்பாடு செய்த நிலையில், மற்றொரு மகனை மீட்க பணம் இல்லாததால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் புகார் செய்தார். 

இந்நிலையில் மாரியம்மாளின் மகன் மணித்துரையை தாய்லாந்து நாட்டில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளதாக, மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட்  செய்திருந்தார். மத்திய அமைச்சரின் பதில்  ஆதரவாக இருப்பதாக தெரிவித் திருந்த மாரியம்மாள் நம்பிக்கை யுடன் காத்திருந்தார். ஆனால் தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் ரூ.58 ஆயிரம் பணம் செலுத்த வேண்டியிருக்கும், அதற்கு ஏற்பாடு செய்யவும் என்று  மாரியம்மாளுக்குத் தகவல் கூறி யுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த மாரியம்மாள் ஆட்சி யரிடம் இது குறித்து புகார் தெரி வித்தார்.

அதற்கு அடுத்த சில நாட்களில் மகனை பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகத்தினர் கேட்டு  சென்றதாகவும், ஆனால் அவரை மீட்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாய் மாரியம் மாள் கூறினார். இந்நிலையில் தாய்லாந்தில் கட்ட வேண்டிய தொகை குறித்து மத்திய அரசிடம்  இருந்து எந்த தகவலும் இல்லாத தால், அரசை நம்பிப் பயனில்லை என தீர்மானித்த  மாரியம்மாள் தனது சொந்த முயற்சியில் 60,000 ரூபாயை கட்டி மகனை மீட்டதாகத் தெரிவித்தார். செவ்வாயன்று ரயில் மூலம் திருப்பூர் வந்த மணித்துரையுடன் இருந்த தாய் மாரியம்மாள் செய்தி யாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு தாங்கள் எதிர்பார்த்திருந்த உதவியை செய்யவில்லை எனவும்,  இனிமேலாவது தங்கள் மகனை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரஞ்சித்தை கைது செய்து வெளி நாடு அழைத்துச் செல்ல கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.