கோவை, மே 13 - என்டிசி பஞ்சாலையில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு ஏப் ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிடுவதுடன், ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி கோவை என்டிசி தலைமையகம் முன்பு புதனன்று சிஐடியு மில் தொழிலா ளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் மத்திய அரசிற்கு சொந்தமான 5 என்டிசி பஞ்சா லைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில் கடந்த இரண்டு மாதங் களாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் பஞ்சாலைகள் இயங்க வில்லை. இச்சூழலில் ஊரடங்கு காலத்தில் ஊதிய பிடித்தம், ஆட் குறைப்பு போன்ற நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது என தனி யார் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட மத்திய அரசு, அதன் சொந்தமான என்டிசி பஞ்சாலையில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கான முழு ஊதியம் வழங்கவில்லை.
மேலும், ஆலையை இயக்குவ தற்கான எந்த அறிவிப்பும் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து புதனன்று சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கோவை காட்டூரில் உள்ள என்டிசி பஞ் சாலை தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து எல் பிஎப் பஞ்சாலை சங்க தலைவர் பார்த்தசாரதி, சிஐடியு மில் தொழி லாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.பத்மநாபன் ஆகியோர் நிர் வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத் தினர். இதில் நிலுவை ஊதி யத்தை ஓரிரு நாட்களில் வழங்கு வதாகவும், பஞ்சாலைகள் இயங் குவது என்பது பொது முடக்கம் முடிந்த பிறகு சந்தையில் நூல் விற்பனைக்கு வரவேண்டும்.
மேலும் நெருக்கடியான நிலையில் பஞ்சாலைகள் உள்ளதால் இது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் சி.பத்மநாபன் கூறுகையில், ஊதி யம் உடனடியாக தரப்படும் என நிர் வாகம் தெரிவித்துள்ளனர். பஞ் சாலைகள் இயக்குவதற்கான நட வடிக்கையை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவ னத்திற்கு கொண்டு சென்று மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம் என தெரிவித்தார்.