tamilnadu

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.90 லட்சம் மோசடி

தருமபுரி, ஜூலை 6- தருமபுரி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.90.77 லட்சம் கையாடல் செய்த வழக் கில் செயலர் உள்பட 3 பேரை வணிக குற்றப் பிரிவு காவல்துறையினர்  கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், கே.கே.73 ஒட்ட ஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சங்கத்தின் செய லராக சங்கர், முதுநிலை எழுத்தராக பழனி,  எழுத்தராக முருகன் ஆகியோர் பணியாற் றினர். அப்போது, மூவரும் கூட்டாகச் சேர்ந்து சங்க உறுப்பினர்களின் சேமிப்புக்  கணக்குகளில் இருந்து ஈட்டு வைப்புத் தொகை இல்லாத நிலையில், போலியான பதிவுகளை தயார் செய்து,  அதன் மூலம் மத் திய கூட்டுறவு வங்கியின் சங்க சேமிப்புக் கணக்குகளில் இருந்து சங்கப் பணம் ரூ.90 லட்சத்து 77 ஆயிரத்து 966 கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து தருமபுரி கூட்டுறவு சங்கங் களின் துணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில்,  வணிக குற்றப் புல னாய்வுப் பிரிவு ஆய்வாளர் கவிதா வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கூட்டுறவு சங்கச் செய லர் சங்கர், பழனி, முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மூவரும் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.