உதகை மலை ரயில் பாதி வழியில் நிறுத்தம்
மேட்டுப்பாளையம், நவ.12- மலை ரயில் செல்லும் பாதை யில் ஏற்பட்ட மண் சரிவால் மேட் டுப்பாளையம்- உதகை இடையே யான மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின் னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பழமையான மலை ரயிலில் பய ணித்து நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாடு முழுவ திலும் இருந்து ஏராளமான சுற் றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை புரிகின்றனர். இந்நிலை யில் செவ்வாயன்று காலை மேட் டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்ற நிலையில் ஹில் குரோவ் அடர்லி ரயில் நிலையங் கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு இருப்பு பாதையில் பாறைகள் உருண்டு கிடப்பது குறித்து தகவல் தெரிய வந்தது.
இதனையடுத்து மலைரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. மண்சரிவின்போது மேலிருந்து பாறைகள் உருண்டு விழுந்து மலை ரயில் கடந்து செல்லும் தண்ட வாளங்கள் சேதமானதால் மேற் கொண்டு பயணிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதனால் உத கைக்கு புறப்பட்ட மலைரயில் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே வந்தடைந்தது. இதனையடுத்து ரயிலில் வந்த சுற் றுலா பயணிகள் பேருந்துகள் மற் றும் கார் மூலம் உதகைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதிக நேரம் ஆகி விட்டதால் சிலர் மீண்டும் உதகைக்கு செல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்றனர். கனமழையால் ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக மலை ரயில் பயணம் பாதியில் முடிவ டைந்ததால் இதில் பயணித்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற் றத்திற்கும் அவதிக்கும் ஆளாகினர். தற்போது மண்சரிவு ஏற்பட் டுள்ள பகுதியில் இருபதிற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகள் மாலைக்குள் நிறைவ டைந்து வழக்கம்போல் மலைரயில் மீண்டும் இயக்கப்படும் என கூறப்படுகிறது.