திருப்பூர், ஜூலை 4 - பிரதமர் கிஸான் திட்டம் என்ற பெயரில் விவசாயி களுக்கு நிதி வழங்கும் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்குவதுடன், அத்திட் டத்தை நிறைவேற்ற போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சி யரக நுழைவாயில் முன்பாக புதனன்று மதியம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அலுவலக உதவி யாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடங்களை வெளி முகமை மூலம் (அவுட் சோர்சிங்) நியமனம் செய்வதை கைவிட வேண்டும். மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) துணை ஆட்சியர் நிலையில் உள்ள பணியிடங்கள் தொடர்ந்து வருவாய்த்துறையிடமே தொடர வேண்டும். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியமர்த்து வதை கைவிட வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங் களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ச.முருகதாஸ் தலைமை ஏற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொறுப்பாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.