tamilnadu

img

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக

கோவை, ஆக. 18- மணல், சிமெண்ட், கம்பி மற் றும் பெயிண்ட் உள்ளிட்ட கட்டு மானப் பொருள்களின் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு கட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத்தின் 18 ஆவது கோவை மாவட்ட மாநாடு காட்டூர் மில்சங்க கூட்ட அரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. கே.ஆர்.தேவரா ஜன், டி.லோகநாதன் நினைவரங் கத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கே.மனோ கரன் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றி னார். மாநாட்டை துவக்கி வைத்து கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.குமார் சிறப்புரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரை யாற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி அறிக்கையை முன்வைத்து பேசி னார். முன்னதாக இம்மாநாட்டில், கட்டுமானத் துறையில் 100 சத விகித அந்நிய மூலதனத்தை புகுத்தாதே, வீடு இல்லாத கட்டு மான தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். நலவாரிய செயல்பாடுகளை முடக்காதே, நலவாரிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை தனியா ருக்கு விற்காதே, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை  கட்டுப்படுத்த வேண்டும். கட்டு மான தொழிலாளர்களின் சட்ட  சமூக பாதுகாப்பை உறுதிசெய் திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதனையடுத்து மாநாட்டில் சங்கத்தின் புதிய தலைவராக கே.மனோகரன், பொதுச் செயலா ளராக ஆர்.பழனிச்சாமி,  பொருளா ளராக எம்.முருகையா உள்ளிட்ட 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் உரையாற்றி னார். முடிவில் எல்.முருகேசன் நன்றி கூறினார். மாநாட்டில் மாவட்டம்முழுவதும் இருந்து ஏராளமான கட்டுமான தொழி லாளர்கள் பங்கேற்றனர்.