மேட்டுபாளையம், டிச.12- பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் நகரிலுள்ள, பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு பாச னத்திற்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுநீர் நேரிடையாக வும். மறைமுகமாகவும் கலப்பதால் பவானி ஆற்று நீர் மாசுபட்டு வந்தது. இதனால் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பவானி ஆற்று நீர் மாசு படுவதை தடுக்க ரூ.97 கோடியே 70 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கழிவுநீர் கலந்த நிலையில் தோட்ட வாய்க்கால்களில் நுரையுடனும், மாறுபட்ட நிறத்துடனும் தண்ணீர் வரு வதாக அப்பகுதி விவசாயிகள் வாட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட வட்டாட்சியர் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு கிணற்று நீர் நீல நிறத்தில் இருப்பதை மாவட்டஆட்சியர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின்பேரில் மாசுகட்டுப்பாடு வாரிய உதவி பொறி யாளர் நீலமேகம் மாசுபட்டு நிறம் மாறிய கிணற்று நீர் மற்றும் வாய்க்கால்களில் நுரையுடன் ஓடும் தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இத்தண்ணீரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத் தப்பட்டு ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என வும் தெரிவித்தனர். அதேநேரம், ஆற்றில் கழிவுநீர் கலப் பதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுபாளையம், டிச.12- பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் நகரிலுள்ள, பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு பாச னத்திற்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுநீர் நேரிடையாக வும். மறைமுகமாகவும் கலப்பதால் பவானி ஆற்று நீர் மாசுபட்டு வந்தது. இதனால் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பவானி ஆற்று நீர் மாசு படுவதை தடுக்க ரூ.97 கோடியே 70 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கழிவுநீர் கலந்த நிலையில் தோட்ட வாய்க்கால்களில் நுரையுடனும், மாறுபட்ட நிறத்துடனும் தண்ணீர் வரு வதாக அப்பகுதி விவசாயிகள் வாட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட வட்டாட்சியர் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு கிணற்று நீர் நீல நிறத்தில் இருப்பதை மாவட்டஆட்சியர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின்பேரில் மாசுகட்டுப்பாடு வாரிய உதவி பொறி யாளர் நீலமேகம் மாசுபட்டு நிறம் மாறிய கிணற்று நீர் மற்றும் வாய்க்கால்களில் நுரையுடன் ஓடும் தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இத்தண்ணீரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத் தப்பட்டு ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என வும் தெரிவித்தனர். அதேநேரம், ஆற்றில் கழிவுநீர் கலப் பதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.