உதகை,ஜன.30- உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் தடுப்பு வேலி அமைத்திட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தாவரவி யல் பூங்காவில் கழிப்பறை அருகில் 10 அடி ஆழத்தில் ஒரு குளம் உள்ளது. இதனை சுற்றி தடுப்பு வேலிகள் எதுவும் இல்லாமல் காணப்படுகிறது. இந்நிலையில் கழிப்பறைக்கு வரும் சுற்றுலா பயணி கள் மற்றும் சிறுவர்கள் இந்த குளத்திற்கு மிக அருகில் செல்கின்றனர். சில சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளத்தில் விளையாட்டில் ஈடுபடுகின்ற னர். குளத்திற்கு தடுப்பு வேலி இல்லாத நிலையில், விபத்து நேரிடும் வாய்ப்பு உள்ளதால் இந்த குளத் திதை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.