உதகை.டிச 13- நீலகிரி மாவட்டத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததை சீரமைக்கும் பணியில் ஈடுபட் டுள்ள பணியாளார்களுக்கு பாதுகாப்பு சாத னங்களை வழங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பஞ்சாயத்து அலுவலக சுற்றுச்சுவர் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது.அதனை சீரமைக்கும் பணி தற்போது நடைப் பெற்று வருகிறது.70 அடி உயரத்தில் ஆபத்து மிகுந்த சரிவான பகுதியில் சீரமைப்பு பணி யில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு எந்தவித உயிர் பாதுகாப்பு சாத னங்களையும் ஒப்பந்ததார் வழங்கவில்லை. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு செல்லும் எந்த அதிகாரிகளும் இதனை கண்டுகொள் வதாக தெரியவில்லை. இப்பணியில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேரிடும் முன்பு பாதுகாப்பு சாதனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.