இலவச வீட்டு மனை கேட்டு மனு நாமக்கல், ஜூலை 27- புதுச்சத்திரம் ஒன்றியம், கங்காணி ஊராட்சி 5 ஆவது வார்டு அருந்ததியர் தெருவில் இலவச வீட்டு மனை கேட்டு அப்பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கலங் கானி ஊராட்சியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனார். அருந்ததியர் தெருவில் 80க்கும் மேற்பட்டோர் குடியிருக்க வீட்டு மனை இல்லாததால் கூட்டு குடும்பமாகவும், இட நெருக்கடியிலும், வாடகை வீடு களிலும் வசித்து வருகின்றனர். தினசரி கூலி வேலைக்கு சென்று வரும் இவர்கள் தனியாக நிலம் வாங்கி வீடு கட்டும் அளவிற்கான வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே, அரசு சார்பில் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சனியன்று அப்பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரி யத்திடம் மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.