தருமபுரி, ஜூலை 29- தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி சமூக சேவை மையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித் தனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயாஸ், ஒருங்கிணைப்பா ளர்கள் ஆயர்கள் மரியம்ஜோசப், ஜேசுதாஸ், மக்கள் கண் காணிப்பகம் மாவட்ட தலைவர் செந்தில்ராஜா உள்ளிட் டோர் அளித்த மனுவில், மத்திய பாஜக அரசு புதிய கல்வி கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கல் விக்கொள்கை, கல்வி என்ற பொது உரிமைக்கு ஊறு விளைவிக்கிறது. மத சிறுபான்மையினரின் உரிமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது, பெருமான்மை இனவாதத்தை உள்ளடக்கியதாக உள்ளது. கல்வியை வியபாரமாக்க முயற்சிக்கிறது. கல்வி கட்டமைப்பை ஒருசார்பாக அதி காரப்படுத்துகிறது. மத்திய அரசு கல்வி அதிகாரித்தை சர்வாதிகாரமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறது. எனவே, மத்திய அரசின்தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த கல்விக் கொள்கையை கிறிஸ்துவ சிறுபான்மை சமூகம் முழுமையாக புறக்கணிக்க வலியுறுத்துகிறது என தெரிவித் துள்ளனர்.