கோவை, ஜூலை 21- கல்விக் கொள்கை வரைவு – 2019 திருத்தப்பட வேண்டியதா, திரும்பப்பெற வேண்டியாத என்பது குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது. கோவை அவிநாசி சாலையில் உள்ள ஆர்தரா அரங்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலை வர் பி.எஸ்.உமர்பரூக் தலைமை தாங்கினார். தேசய கல்விக்கொள் கையில் சமூக அநீதி என்கிற தலைப் பில் மூத்த பத்திரிகையாளர் அ.கும ரேசன், தேசிய கல்விக்கொள்கையும், கல்வி மறுகட்டமைப்பும் என்கிற தலைப்பில் தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த அமைப்பின் மனிதவளத்துறை செயலாளர் வி.பஹ்ருத்தீன் அலி அஹமத் ஆகியோர் கருத்துரை யற்றினர். முன்னதாக இக்கருத்தரங்கில் தலைவர்கள் பேசுகையில், பள்ளிக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிநிலை கல்வி வரைவிலும் மத்தியில் பிரத மர் தலைமையில் அமையவுள்ள ‘தேசிய கல்விக் கவுன்சில்’ நடைமுறை யில் சாத்தியமற்றது. அதிகாரம் குவிக்கப்பட்ட நிலையில் கல்விப் புலத்தில் இதுவரை இந்தியா வெளிப் படுத்தி வந்துள்ள பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மைகளை பெரி தும் கேள்விக்குள்ளாக்கும். மாணவர் களின் தனிப்பட்ட தகவல்கள் மற் றும் கல்வி, வேலைவாய்ப்பில் வெளிப் படைத்தன்மையை பெரிதும் பாதிக் கும்.
வெளிப்படையாகவே இம்மையம் தனது செயல்பாடுகளுக்கு வெளி நாட்டு நிறுவனங்களுடன் கைகோர்க் கும், திரட்டப்படும் தகவல்கள் பிற நோக்கங்களுக்கும் பயன்படுத்தப் படும் என அறிவித்திருப்பது அரசின் இறையாண்மைக் கொள்கையை நிச்சயம் கேலிக்கூத்தாக்கும். மாநில, வட்டாரஞ்சார்ந்த தேவைகள் மற் றும் முன்னுரிமைகளை பெயரள விற்கு வழிமொழிந்துவிட்டு, பாடப் புத்தகங்கள் தேசிய அளவில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர் களின் கலாச்சாரம் மற்றும் புவியியல் காரணிகளின் அடிப்படையில் அறிவு பெறுவதைத் தவிர்த்துவிட்டு ‘தேசிய’ என்ற விளக்கப்படாத வளையத்தில் வைத்து பாடப்புத்தகங்களின் வழி யாக போதிக்க அரசியல் உள் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள் ளது. பள்ளிக், கல்வியிலும், உயர் கல்வியிலும் நேரடியான தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் வழியாக கல்வித் துறையை முற்றிலும் வணிகத்துறை யாக மாற்ற மத்திய பாஜக மோடி அரசு முயற்சிக்கிறது.
கல்வி நிறுவனங்களுக்கான அர சின் நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைத்து (உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜிடிபியில் இருந்து 0.1 சதவிகிதம் ) வழிகாட்டுவ தென்பது இனி கல்வியும் ஒரு கடை சரக்கு தான் என்பதை திட்டவட்ட மாக அறிவிக்கிறது. இந்த கல்விக் கொள்கை வரைவு அறிக்கை. சம வாய்ப்பும் வசதிகளும் இதுவரை கூட நாட்டின் எல்லோருக்கும் கிட்டாத நிலையில் இத்தகைய போக்கு இந்தியாவின் எதிர்காலத்தில் ஒரு பெரும் மக்கள் திரளைக் கல்வியை விட்டே நீக்கி வைக்கும். தரமற்ற தனியார் கல்வி நிறு வனங்களில் பெருக்கமும், சாதா ரண நடுத்தர வர்க்கத்திற்கான கல்வி கனவு பறிக்கப்படும். இந்தியா வின் பண்பாட்டு, கலாச்சார வேறு பாடுகளை கணக்கிலெடுக்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக் களை காக்க வழிகாட்டி உள்ள விதி கள் என எதுவும் புதிய பாடத்திட்ட வரைவு கணக்கில் எடுக்கப்பட வில்லை. மேலும், மூன்று வயது தொட்டு மும்மொழிக் கொள்கை என்பதும் இந்தியாவை ஐக்கியப்படுத்தும் மொழி என வழக்கொழிந்த சமஸ் கிருதம் முன்னிறுத்தப்படுவதும், அறிவியல் மொழியாக வடமொழி அடையாளம் காட்டப்படுவதும், கணி தம் மற்றும் கலாச்சார நன்னெறி வகுப்புகளின் மொழியாக சமஸ் கிருதம் சுட்டிக்காட்டப்படுவதும், இந்தியாவின் பன்மைத் தன்மைக் கான அரசியலமைப்புச் சட்ட விதி களுக்கு நேர் எதிரான மொழிக் கொள்கைகளே! ஒற்றைக் கலாச் சார-பண்பாடுகளை, மொழியை உயர்த்திப் பிடிப்பது, ஆங்கிலம் கற்பதனால்தான் இந்திய தன் மையின் புனிதம் கெடுகிறது என பேசுவதெல்லாம் புதிய கல்விக் கொள்கை வரைவில் உள்ளது. இது தேசத்தை ஆபத்தை நோக்கி இழுத்துச் செல்லும். ஆகவே இந்த புதிய கல்விக் கொள்கை திரும்பப்பெற வேண் டும் என்பதை வலியுறுத்தி தலை வர்கள் கருத்துரையாற்றினர். இக்கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.