நாமக்கல், ஆக.3- சிஐடியு மாவட்ட மாநாட்டு விளம்பர தட்டிகளை திட்டமிட்டு அகற்றியதை கண்டித்து ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை அனைத்து கட்சியினர், தொழிற் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) நாமக்கல் மாவட்ட 7 ஆவது மாநாடு ராசிபுரத்தில் ஆக.4 மற்றும் 5 ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் மற்றும் விளம்பர பணிக்காக ராசி புரம் நகரம் முழுவதும் சுவர் விளம் பரங்கள், பிளக்ஸ் பேனர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்ன தாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராசிபுரம் நக ராட்சி நிர்வாகம் எவ்வித முன் அறிவிப்புமின்றி மாநாடு நடை பெறும் ஒரு நாளுக்கு முன்னதாக அனைத்து விளம்பர தட்டிகளை யும் அகற்றிவிட்டனர். நகரம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட அமைப்புகளின் தட்டி களையும், சிஐடியு மாவட்ட மாநாட்டு விளம்பர தட்டிகளை யும் மட்டும் குறிவைத்து அகற்றி யிருப்பது தொழிற்சங்கத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைய டுத்து, சிஐடியு உள்ளிட்ட தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள், சிபிஎம், திமுக, திராவிட கழகம், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சனியன்று ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி கூறிய தாவது, சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றி தரவேண்டும் என பொதுமக்களின் அடிப்படை தேவைகளை மையப்படுத்தும் கோரிக்கைகள் அடங்கிய சிஐடியு மாவட்ட மாநாட்டு விளம்பர தட்டி கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்ன தாகவே ராசிபுரம் நகரம் முழுவ தும் வைக்கப்பட்டன. ஆனால், நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் வேண்டுமென்றே திட்டமிட்டு பிளக்ஸ் பேனர்களை அகற்றி விட்டனர். அதேநேரம், நகராட்சி முழு வதும் ஏராளமான விளம்பரத் தட்டிகள் உள்ளன. இவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு மாநாட்டின் கோரிக்கைகளை மக்கள் மத்தி யில் கொண்டு செல்லக்கூடாது என்ற தவறான நோக்கத்தோடு நகராட்சி நிர்வாகம் செயல் பட்டு இருப்பது மிகவும் கண்டிக் கத்தக்கது. இது ஒருதலைப்பட்ச மான செயலாகும் என அவர் தெரி வித்தார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். திமுக நகர வளர்ச்சி மன்ற தலைவர்.வீ.பாலு, 1 ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் வீ.மாரியப்பன், தேமுதிக மாவட்ட தலைவர் ஏ. இளையராஜா, திராவிட கழக நகர தலைவர் சேகுவேரா, பாடி பில்டிங் அமைப்பு நகர தலைவர் பி.வேலு. சிஐடியு நிர்வாகி எம்.ஜி.ராஜகோபால், மின் அரங்க செயலாளர் இ.கோவிந்தராஜ், நிர்வாகிகள் முருகேசன், கண் ணன்,கூட்டுறவு சங்க செயலாளர் எம்.ரங்கசாமி, போக்குவரத்து கழக சங்க செயலாளர் பழனி வேல், மின் அரங்க ஓய்வுபெற் றோர் அமைப்பின் தலைவர் குப்பண்ணன், கட்டுமான தொழி லாளர் சங்க தலைவர் மாதேஸ்வ ரன், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சங்கரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டு நக ராட்சிக்கு எதிராக கண்டன முழக் கங்களை எழுப்பினர்.