பொள்ளாச்சி, மே 10- பழங்குடியின மக்களுக்கு முழுமை யான நிவாரணம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொ டர்ச்சி மலை பகுதிகளில் 17 வன கிரா மங்களில் மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து கடந்த 45 நாட்களாக ஊரடங்கு அமலி லுள்ளது. இந்நிலையில் வன கிராமங் களில் பழங்குடியின மக்கள் பலர் தனி மைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் போக்குவரத்து வசதிகளும், பொருளா தாரமும் இன்றி மிகுந்த சிரமத்தற்கு ஆளாகியுள்ளனர். இதனையறிந்து சில தன்னார்வலர்கள் சிலர் மற்றும் வரு வாய்த் துறையினர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். எனினும் தற் போது ஏற்ப தேவைகளை இவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு மூல மாக அறிவிக்கப்பட்ட பழங்குடி யின நல வாரிய திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.1000 வழங்கிட உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கோவை மாவட்டம் முழுவதும் வெறும் 30 சதவிகித அளவிலான பழங்குடியின மக்களுக்கே நிவாரணம் சென்றடைந் தது. இன்னும் 70 சதவிகித அளவிலான நிவாரணம் தொகை பழங்குடியின மக்களுக்கு சென்றடையவில்லை. இந்த நல திட்ட உதவிகள் பொள்ளாச்சி தனிவட்டாட்சியர் மேற்பார்வையில் நடைபெற்றுவருகிறது. இதில் பல மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு பழங்குடியின நல வாரிய அட்டை கள் இல்லையெனவும், புதுப்பிக்கப் படவில்லை எனவும் காரணம் கூறப் பட்டதாக மலைவாழ் மக்கள் தெரிவிக் கின்றனர். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் மிகவும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற, கோவை மாவட்ட அனைத்து பழங்குடியின மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகை யான ரூ.1000 வழங்கிட தமிழக முதல் வர் மற்றும் வனத்துறை அமைச்சர் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள் ளார்.