tamilnadu

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கூறாய்வு செய்ய தாமதம் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

பொள்ளாச்சி, ஜூலை 12- பொள்ளாச்சி பகுதியில் வலிப்பு நோயால் உயிரிழந்த 6  வயது சிறுமியின் உடலை கூறாய்வு செய்வதற்காக பொள் ளாச்சி அரசு மருத்துவமனையில் 10 மணி நேரத்திற்கும் மேலானதால்,  குழந்தையின் உறவினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பெதப்பபம்பட்டியை அடுத்த தேங்காய்தொழிலாளி சின்ராஜ் (29) மற்றும் செல்வி (26) தம்பதியின் மகள் மோனிஷா (6). இவர் பொள் ளாச்சி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 1 ம் வகுப்பு படித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவ னும், மனைவியும் கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் செல்வியின் தந்தையின் பராமரிப்பில் குழந்தை மோனிஷா வளர்ந்து வந்தார்.  சிறுமி மோனிஷா அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. வியா ழனன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுமியின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரி தாபமாக உயிரிழந்துள்ளார்.  இதனையடுத்து சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்து காலை 11 மணி அளவில் ஒப்படைக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகி றது. ஆனால் மாலை 5 மணி வரை உடற்கூறாய்வு செய்யப் படாமல் மருத்துவமனை நிர்வாகம் இழுத்தடிப்பு செய்த தால், அங்கு திரண்ட100 க்கும் மேற்பட்ட சிறுமியின் உற வினர்கள் ஆவேசமடைந்தனர்.மேலும் உடலை கேட்டு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவல் துறை யினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத்  தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவர்  அழைத்துவரப்பட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.