இளம்பிள்ளை, மார்ச் 6- பெருமாகவுண்டம்பட்டியில் வெள்ளி யன்று நூலகம் திறக்கப்பட்டதால் வாச கர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கிளை நூலகம் கட்டப்பட்டன. இக்கட்டிடம் திறக்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் இருந்து வந்தது. இதனால் வாடகை கட்டித்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நூலக கட்டிடம் பெரு மாகவுண்டம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வெள்ளியன்று திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. புதிய நூலகத் திறப்பு விழா வில் முன்னாள் தலைமையாசிரியர்கள் ரங்கசாமி, செங்கோட்டுவேல், ஞானப் பிரகாசம், இளஞ்செழியன், தனபாலன், மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, ஊராட்சி மன்ற தலைவர் பிரேம லதா சதீஷ், துணைத்தலைவர் வடிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் சாஸ்தா, கிளை நூலகர் ஜெயக்குமார், ஊராட்சி செயலாளர் பிரபா கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப் பாளர்கள் பேசுகையில், நூலகம் சென்று பல்வேறு நூல்களை படித்தவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகத்தில் மரியாதை மிக்கவர்களாக உள்ளனர். ஆனால் தற்சமயம் வாசிப்புத்திறன் குறைந்துகொண்டு வருவது வருத்தம ளிக்கிறது. நூலகத்திற்கு வரும் வாச கர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. ஆகவே, கிராம பகுதியில் செயல்பட்டு வரும் நூல கத்தினை பள்ளி மாணவ, மாணவிகளும், இளைஞர்களும், பொதுமக்களும் பயன் படுத்தி நல்ல அறிவாற்றலை பெற வேண்டும் என தெரிவித்தனர்.