tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

அன்னூர், ஆக்.25- அன்னூர் அருகே பொன்னே கவுண்டன் புதூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்திற் குட்பட்ட பொன்னே கவுண்டன் புதூர் ஊராட்சிக் குட்பட்ட செந்தாம்பாளையத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்  நடைபெற்றது. இம்முகாமில் 75 யூனிட் ரத்தம்  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு  வழங்கப்பட்டது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அர்ஜுன், முன்னாள் மாவட்டத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் பிரதீப், மகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;