தருமபுரி, ஜூன் 16- பொறியியல் சேர்க்கை கலந் தாய்வுக்கான தர வரிசைப்பட்டி யல் வரும் ஜுன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச் சர் கே.பி.அன்பழகன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து தருமபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், கடந்த மே 2 ஆம் தேதி தொடங்கிய பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப் பிக்கும் பணிகள் மே 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப் பட்டது. தமிழகத்தில் உள்ள 46 சேவை மையங்கள் மூலம் ஜூன் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக பொறியியல் சேர்க் கைக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் பதிவு செய்திருந்தனர். இதில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 418 பேர் சான்றிதழ் சரிபார்ப் புப் பணிகளில் பங்கேற்ற னர். இது, 78.4 சதவிகிதம் ஆகும். நடப்பு கல்வியாண்டுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகள் நிறைவு பெற்று ஜூன் 17 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், மாணவர் களின் நலன் கருதி தர வரிசைப் பட்டியல் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும். இந்த இடை வெளியில் சான்றிதழ் சரிபார்ப் பின்போது ஏற்பட்ட சில பிரச்ச னைகளை சரிசெய்து, ஏதேனும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க இயலாத சிலருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அவர் களது பெயரையும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறச் செய் யும் வகையிலும் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக பொறியியல் சேர்க்கை மாண வர்கள் இந்த வாய்ப்பை முழு மையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலை இணைய தளத்தில் 4 நாட்கள் பார்வையிட முடியும். இந்த பட்டியலில் தவறு நேர்ந்தி ருப்பினும், சந்தேகங்கள் ஏற் பட்டாலும் சென்னை தொலை பேசி எண்களான 044-22351014 மற்றும் 22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த வாய்ப் பினை மாணாக்கர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக்கொண்டார்.