tamilnadu

img

தரமற்ற உணவும், சுகாதாரமற்ற விடுதியும் அரசு விடுதியின் அவல நிலையை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 2- மாணவர்கள் விடுதியில் தர மற்ற உணவும், குடிநீர் இல்லாமை, சுகாதாரமற்ற நிலையைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை, துடியலூர் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி செயல் பட்டு வருகிறது. இங்கு பயிலும் ஆதி திராவிட மாணவர்கள் வெள்ளக்  கிணறு பகுதியில் உள்ள ஆதிதிரா விடர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. குடிநீருக்காக இரண்டு கிலோ மீட்டர் சென்று மாண வர்களே குடத்தில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். மாணவர்கள் தங்கும் அறை, கழிப்பிடம் அனைத்தும் சுகாதா ரமின்மையோடு உள்ளது. இது குறித்து விடுதி மற்றும் ஐடிஐ பயிற்சி பள்ளி முதல்வரிடமும் மாணவர்கள் பல  முறை மனு அளித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.  இதனையடுத்து ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கும் ஐடிஐ மாண வர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ், துணை தலைவர் அசார் ஆகியோர் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விடுதியில் வழங்கப்பட்ட உணவைக் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் காட்டினர். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகள், அரசு வழங்கும் சலுகைகள் அனைத் தும் மறுக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.  இதனைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி உடனடியாக அதிகாரிகளை அழைத்து விடுதியின் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இத னையடுத்து விடுதியை வட்டாட்சியர் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப்படும் உணவு, கழிப்பிடம், தங்கும் அறைகள் அனைத் தையும் ஆய்வு செய்தார். நீண்ட நாட்கள் கோரிக்கை வைத்தும் ஏதும் நடைபெறாத நிலையில் மாவட்ட ஆட் சியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற வுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்தது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.