கோவை, செப். 21 – கோவையில் தரமில்லாமல் கட்டப் பட்டதால் திறப்பு விழா காணும் முன்பே பொதுக்கழிப்பிடம் இடிந்து விழுந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், நீலாம்பூர் வெங்கட்டாபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையேற்று சூலூர் ஒன் றிய நிதியில் இருந்து இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ஆண், பெண் இருபாலர் பயன்படுத்த ஏது வாக கட்டப்பட்ட இந்த பொதுக் கழிப்பிடத்தின் கட்டிட பணிகள் அண் மையில் நிறைவடைந்தது. மின் இணைப்பு கொடுத்தவுடன் திறப்பு விழாவிற்கு தேதி குறித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வருவது என நீலாம்பூர் ஊராட்சி நிர்வாகம் திட்ட மிட்டிருந்தது.
இந்நிலையில், சனியன்று திடீ ரென பொதுக்கழிப்பிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், பொதுக்கழிப்பிடத்தின் நடுப்பகுதி யில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிக ளிடம், தரமில்லாமல் கட்டப்பட்டதால் தான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என சரமாரியாக பொதுமக்கள் குற் றம்சாட்டினர். இதனையடுத்து தற் போது அவசர அவசரமாக இடிந்த பகுதிகளை முழுமையாக இடித்து விட்டு கட்டிடத்தை பலப்படுத்தும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், கட்டுமானப் பணி கள் நடைபெறும்போதே கட்டிடத் தின் உறுதித்தன்மை குறித்து கேள்வி எழுப்பினோம். இதனை ஒப்பந்தாரர் கள், அதிகாரிகள் என யாரும் கண்டு கொள்ளவில்லை.
இப்போது முழுமை யாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்துவதற்குள் இடிந்து விழுந்துள் ளது. மேலும், சுவர்களில் பெரும் விரி சல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டு மானப் பொருட்களின் சேர்க்கை குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மக்கள் பணத்தை ஊழல் செய்வதற் காக தரமில்லாத கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் உடந்தையாக உள்ள அதிகாரிகள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.