பொள்ளாச்சி, ஜூன் 9 - பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை ரோட்டில் சாலைகள் விரிவாக்கத்திற்காக வீட்டு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் சாலை விரிவாக்கப் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி நெடுஞ்சாலை துறைக் கோட்டத் தின் சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்ந்து அனைத்து துறைகளிலும் பணியாளர் கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத் துறையி னர் சார்பில் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டிலுள்ள சில வீடுகளை காலி செய்து சாலையினை விரிவாக்கம் செய்ய திங்களன்று அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதிப் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தகவலறிந்து வந்த பொள்ளாச்சி காவல்துறை ஆய்வாளர் வைரம் மற்றும் பொள்ளாச்சி வருவாய் ஆய்வாளர் பட்டுராஜா, பொள்ளாச்சி நெடுஞ் சாலைத் துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரச்சனைக்கான உரிய தீர்வை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.