tamilnadu

img

தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, மே 8-அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் அருகில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் அருகில் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக செயல்படுகின்றன. இந்த அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மையத்தின் அருகில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் குப்பை சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுகின்றன. மேலும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கூறப்பட்டன. ஆனால் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றப்பட வேண்டும். சாக்கடை அடைப்புகளை நீக்கப்பட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;