மேட்டுப்பாளையம், பிப்.23- சிறுமுகை அருகே காட்டாற்றில் ஆபத் தான முறையில் பரிசல் பயணம் மேற்கொள் ளும் மக்களுக்காக ஆற்றைக் கடக்க பாலத்தை உயர்த்திக்கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட மலையடிவார கிராமங்களான லிங்காபுரம் – காந்தவயல் இடையே காந்தை யாறு என்னும் காட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 2005 ஆண்டு ரூ.40 லட்சம் செலவில் இருபதடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள இவ்விடத்தில் சரியாக கணக்கிடாமல் காந்தையாற்றின் குறுக்கே இப்பாலம் கட்டியதால் பருவ மழைக்காலத் தில் அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியை எட்டும் போதே இந்த பாலம் மூழ்க துவங்கி விடும். அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியை கடந்து விட்டால் இந்த உயர்மட்ட பாலம் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி விடுவ தோடு, இதன் இணைப்பு சாலைகளும் தண் ணீருக்கடியில் மறைந்து விடும். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெய்த பருவ மழையின் காரணமாக பவானி சாகர் ஆணை நிரம்ப துவங்கியதும் இப் பாலம் நீருக்கடியில் மூழ்கியது. இதனால் போக்குவரத்திற்கு இப்பாலத்தை மட்டுமே நம்பியுள்ள மலையடிவார கிராமங்களான காந்தையூர், உளியூர், ஆளூர், காந்தவயல் கிராம மக்கள் காந்தையாற்றின் மீது பரிச லில் பயணித்தே நகர பகுதிக்கு வந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. காட்டாற்றை சிறிய பரிசல்கள் மூலம் கடந்து செல்வது ஆபத்தானது என்றாலும், வேறு வழியின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் உட்பட அனைவரும் கடந்த பல மாதங்களாக பரிசல்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலத் திற்கும் மேலாக மழையின்றி வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவ தால் பவானியாற்றில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் கடந்த ஆறு மாத கால மாக நீருக்கடியில் மூழ்கி கிடந்த பாலம் தற் போது மெல்ல மெல்ல வெளிவர துவங்கி யுள்ளது. 20 அடி உயர பாலத்தின் மேற்ப குதி மட்டுமே நீருக்கு வெளியே தெரிவதா லும், இன்னமும் பாலத்தின் இணைப்பு சாலைகள் தண்ணீருக்கு அடியிலேயே இரு பதாலும், இப்பகுதி மக்களின் பரிசல் பய ணம் தொடர்கிறது. அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் பட்சத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் பாலம் முழுமையாக வெளிவரும். ஆகவே, ஆண்டில் ஆறுமாதம் நீருக்கடி யில், ஆறுமாதம் நீருக்கு வெளியே என மூழ்கும் இப்பாலப் பிரச்சனைக்கு தீர்வு’ காண வேண்டும். மேலும், இந்தாண்டி லாவது இப்பாலத்தின் உயரத்தை அதி கரித்துக் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.