tamilnadu

img

திருமணிமுத்தாறு உபரி நீரை ஏரியில் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு. செப். 26- உபரி நீரை அகரம் ஏரியில் நிரப்பி குடிநீர் தட்டுப்பாட்டை போக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.  திருச்செங்கோடு வட்டம், எலச்சி பாளையம் ஒன்றியத்திலுள்ள அகரம்  ஏரி 50 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. இந்த ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த ஏரியைச் சுற்றி எலச்சிபாளையம்,  சந்தைப்பேட்டை, சின்ன எலச்சி பாளையம், மாரியம்மன் கோவில் தெரு, கணக்கன் காடு, தனலட்சுமி நகர், சூரப்புலிஅம்மன் கோவில்தெரு, செக்காங்காடு, பனங்காடு, தொரட்டிக் காடு, பள்ளக்காடு, அகரம், ஆசிரியர் காலனி, கணேஷ்ராம்நகர் ஆகிய  பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதி களுக்கு கடந்த சில வருடங்களாகவே நிலத்தடி சுமார் 1000 அடி முதல் 1500 வரை சென்றுவிட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்பகுதி மக்கள் சில நேரங்களில் குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையும், 15 நாளுக்கு ஒரு முறை வரும் உப்பு நீரை பயன்படுத்தும் நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட திருமணிமுத்தாறு வழியாக வரக்கூடிய உபரி நீரை அகரம் ஏரியில் நிரப்பிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனரும் விவசாயியுமான பி.மாரிமுத்து கூறியதாவது, கடந்த இருபது வருடங்களாக அகரம் ஏரியில்  நீரை சேமிப்பதற்கான அரசு தரப்பில்  எவ்வித முயற்சிகளும் எடுக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்  சாகுபடி படிப்படியாக குறைந்தன.  இதனால் விவசாயம் அழிந்து வரக் கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை காலங்களில் திரு மணிமுத்தாறு பாதையில் வரக்கூடிய உபரி நீரை அகரம் ஏரியில் நிரப்பும் பொழுது இப்பகுதியிலுள்ள விவசாய  நிலங்கள் மற்றும் வறட்சி காலத்தில்  ஏற்படக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.  ஆனால் வருவாய்த்துறை, ஊராட்சி  ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித் துறையும் இதனை கண்டுகொள்ளா மல் உள்ளனர்.  சமீபத்தில் தமிழக முதல்வர் வெள்ளப்பெருக்கு காலத்தில் ஏற்படக் கூடிய மழைநீரை ஒரு சொட்டு கூட  சேதாரம் செய்யாமல் கிராமப் புறங் களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப  வேண்டும் என அறிவிப்பு வெளி யிட்டார். ஆனால் ஏராளமான கிராமங் களில் ஏரி, குளங்களில் வெள்ளப் பெருக்கு நீரை கொண்டு செல்ல எவ் வித நடவடிக்கை இல்லாத நிலையே நீடிக்கிறது. அதன் ஒரு பகுதிதான் எலச்சிபாளையம் அகரம் ஏரிக்கு  திரு மணிமுத்தாறு மழைநீரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.