tamilnadu

img

நியாய விலைக்கடை அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி, பிப். 20-  பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் தெற்கு  மேட்டுத்தெரு பகுதியில் நியாய விலைக்கடை அமைக்க  வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட வேட்டைக்காரன் புதூர் தெற்கு, மேட்டுத்தெருவில் 1200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலே நியாயவிலைக்கடை கடை அமைந்துள்ளது. இதனால் வயதானவர்கள் மற்றும்  கர்ப்பிணி பெண்கள் வெகுதூரம் நடந்தே சென்று ரேசன்  பொருட்களை வாங்கி வருகின்றனர். எனவே, குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டும்,  அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு  தெற்கு மேட்டுத்தெரு பகுதியில் நியாய விலைக்கடை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதே கோரிக்கையினை வலியுறுத்தி நண்பர் கள் வட்டத்தின் சார்பில் சேத்துமடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனரிடம் மனு  அளித்துள்ளனர்.

;