tamilnadu

img

60 வயது கடந்தவருக்கு நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்கிடுக

கோவை, ஜூன் 27–  முறைசார நலவாரியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொது தொழிலாளர் சங்க மாநாடு தீர்மானத்தில் வலியு றுத்தப்பட்டுள்ளது.   கோவை மாவட்ட சிமெண்ட் அன்டு பொது தொழிலாளர் சங்க (சிஐடியு) மாநாடு சுந்தராபுரத்தை அடுத்த காமராஜ்நகர் பூங்குழலி மாரியம்மன் வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிஐ டியு மாநில துணை தலைவர் எஸ். ஆறுமுகம் துவக்கி வைத்து உரை யாற்றினார். சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, விவசாய சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.  இம்மாநாட்டில் முறைசார தொழி லாளர்களுக்கான நலவாரியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும். கல்வி உதவித்தொகை, திரு மண உதவித்தொகை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பணப்பயன் களை முறைசார தொழிலாளர்களுக்கு நலவாரியம் உடனடியாக வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தியான அனைவருக்கும் நிபந்தனையில்லா மல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதனைத்தொடர்ந்து சங்கத் தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். இதில் தலைவராக என்.செல்வராஜ், பொதுச்செயலாளராக எம்.பஞ்சலிங்கம், பொருளாளராக ஏம்.ஆனந்தன் மற்றும் 14 பேர் கொண்ட நிர்வாகுழு மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்டது. இம்மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் பொருப்பாளரும், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினருமான வி.பெருமாள் உரையாற்றினார்.