மத்திய அமைச்சரிடம் தருமபுரி எம்.பி. கோரிக்கை மனு
தருமபுரி, அக்.12- தருமபுரியில் பண்பலை சேவை யை முழுநேரமும் வழங்கிட வலியு றுத்தி மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் தருமபுரி எம்பி செந்தில்குமார் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மிகவும் பின்தங்கிய மாவட் டமாகும். இங்கு 2007ஆம் ஆண்டு அரசு வானொலி நிலையம் தொடங் கப்பட்டு பண்பலை சேவை வழங்கப் பட்டது. இதில் சென்னை ரெயின்போ நிகழ்ச்சிகளை காலை 6 மணி முதல் மதியம் 12 வரை ஒலிபரப்பியது. பின்னர் 2014ஆம் ஆண்டு முதல் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை (ஒரு சில நிகழ்ச்சிகள் தவிர), சொந்த நிகழ்ச்சிகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ரெயின்போ நிகழ்ச்சிகளையும் ஒலி பரப்பி வந்தது. தற்போது மாலை 5 மணியுடன் பண்பலை சேவை முடி வடைகின்றன. இந்நிலையில் தருமபுரி மாவட்ட பொதுமக்கள், தாங்கள் பணிகளை முடித்து மாலை 5 அல்லது 6 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். அந்த நேரத்தில் பல பயனுள்ள இசை, கல்வி, விவ சாயம், இளைஞர், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காகவும் நிகழ்ச்சி களைக் கேட்க முடியாத சூழல் உள்ளது. மேலும் பொழுதுபோக்கு மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளும், மாலை செய்திகளையும் கேட்க முடிவ தில்லை. சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட வானொலி நிகழ்ச்சிகள் தருமபுரிக்கு கிடைப்பதில்லை. அதே நேரம், தருமபுரி பண்பலை நிலை யத்திற்கு நிகழ்ச்சிகளை நடத்து வதற்கான மத்திய அரசு கடந்த ஜூன் 2018ஆம் ஆண்டில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2007-2008 ஆம் ஆண்டில் விளம்பரத்தின் மூலமாக ரூ.25 லட்சத்ததிற்கும் மேல் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த நிலையத்தின் நிகழ்ச்சியின் நேர நீட்டிப்பை இரவு 12 மணிவரை செய்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள் ளிட்ட மாவட்டங்கள் பயனுறும்.எனவே, தருமபுரி பண்பலை சேவை நேரத்தை காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை நீட்டிப்பு செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் செந்தில்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.