tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குக

ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை

தருமபுரி, பிப்.25- குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குமாறு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத் தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின்  சிறப்புக் கருத்தரங்கம் செவ்வா யன்று தருமபுரி ஊர்தி ஓட்டுநர் சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் டி.மணி தலைமை வகித் தார். இக்கருத்தரங்கில், போராட் டம் ஏன்? என்ற தலைப்பில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் மற் றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் நாகைபாலு பேசினார்.  இதைத்தொடர்ந்து ஓய்வூதியர் களுக்கு மாதந்தோறும் குறைந்த பட்சமாக ரூ.7,850  ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூ தியம் வழங்க வேண்டும். அக விலைப்படி வழங்க வேண்டும். இலவச பேருந்து அட்டை வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. முன்னதாக, இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் இ. சண்முகம்   வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள், சத்துணவு ஓய்வுபெற்றோர்  அமைப்பின் மாநில துணைத் தலைவர் கணேசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கே.துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.