சேலம், ஜூன் 23- சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கொண்டப்பநாயக்கனபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு பேராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் முயல் நகர் அமைந்துள்ளது. இந்த வழியே விநாயகம்பட்டி, செட்டி சாவடி, ஜீவா நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல் கின்றனர். இந்நிலையில் இந்த வழியில் அமைந்துள்ள சாலை மிகவும் சேதமடைந் துள்ளது. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சாலை அமைப்பதாகக் கூறி பூமி பூஜை செய்யப்பட்டது. ஆனால் சாலை அமைக் கப்படவில்லை. இதுதொடர்பாக கொண் டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பொது மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாலை அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆவேசமடைந்த பொது மக்கள் கோரிமேடு அருகில் உள்ள கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி முழுக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து தக வலறிந்து. வந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர் பொதுமக்களை சமாதா னம் செய்தனர். இதையடுத்து ஒரு வார காலத்துக்குள் சாலை வசதி செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அதி காரி மற்றும காவல்துறையினர் உறுதி யளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென் றனர்.