tamilnadu

img

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 250 நாளுக்கு வேலை வழங்கிடுக

விதொச பேரவையில் வலியுறுத்தல்

பென்னாகரம், பிப்.11- தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தின் கீழ் 250 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென விதொச சின்னம்பள்ளி பேரவைக்  கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சின்னம்பள்ளி பகுதி குழுவின் பேரவை கூட்டம் செவ்வாயனன்று நடைபெற்றது. இப்பேரவைக் கூட்டத்திற்கு  பகுதி  குழுத் தலைவர் வி.தேவராஜி தலைமை தாங்கினார். பகுதி செய லாளர் ஜி.ரஜினி அறிக்கை முன் வைத்து  பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.முத்து சிறப் புரையாற்றினார். துணை செய லாளர் ஆறுமுகம், துணை தலைவர் எம்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தேசிய ஊரக வளர்ச்சி திட் டத்தின் கீழ் 250 நாள் வேலை வழங்க  வேண்டும் தினக்கூலியாக ரூ. 600  வழங்க வேண்டும்.  60 வயது பூர்த்திய டைந்த அனைத்து விவசாயத் தொழி லாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3  ஆயிரம்  ஓய்வூதியம் வழங்க  வேண்டும். விவசாய தொழிலாளர் களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.கடமடை அரசு சுகாதார நிலையம் முன்பு அனைத்து பேருந்துகளும் நிறுத்திச் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னம்பள்ளி பகுதியில் உள்ள  அனைத்து கிராமங்களுக்கும்  சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப் பட்டன.

புதிய நிர்வாகிகள்

இதைத்தொடர்ந்து புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக வி.தேவராஜி, துணைத்தலைவராக எம்.ரவி,  செயலாளராக ஜி.ரஜினி, துணைச் செயலாளராக சின்னதுரை, பொரு ளாளராக  ஜி.தேவராஜ் உள்ளிட்ட 19 பேர் கொண்ட புதிய பகுதி குழு தேர்வு செய்யப்பட்டது.