திருப்பூர், ஜூலை 11 – திருப்பூர் நெருப்பெரிச்சல் சமத்துவபுரம் சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெருப்பெரிச்சல் ஜெ.ஜெ.நகரில் அண்மையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் சமத்துவபுரம் சமுதாய நலக் கூடத்தில் மராமத்துப் பணிகள் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியு றுத்தியும், குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதி களில் குடிநீர் விநியோகத்தை முறைப் படுத்த வலியுறுத்தியும் தகுதியானவர் களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும், ஜெ.ஜெ.நகர், மே நகர், பாரதிநகர், சமத்துவபுரம் பகுதிகளில் சாலைகளைச் சரி செய்திடவும், நடு ரோட்டில் அமைந்துள்ள மின் கம்பங்களை இடமாற்றி வைக்கவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆ. சிகாமணி, மகாலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமத்துவபுரம் பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.