சேலம், நவ.21- சேலம் மாவட்டம், கெங்க வல்லி பகுதியில் தடைசெய்யப் பட்ட லாட்டரி விற்பனையில் ஈடு பட்ட ஒருவர் கைது செய்யப்பட் டார். தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு லாட்டரி சீட்டு விற்ப னைக்கு அரசால் தடை விதிக்கப் பட்டது. இருப்பினும், கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதிக்கு மறைமுகமாக லாட்டரி சீட்டு கொண்டு வந்து விற்பனை செய்வ தோடு, தனி நெட்வொர்க் மூலம் ‘ஒரு நம்பர், மூன்று நம்பர், லாட்டரி’ என்ற பெயரில், துண்டு சீட்டு வடிவில் விற்பனை செய்யப் படுகிறது. குறிப்பாக, கூலி தொழி லாளர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்கள், தள்ளுவண்டி வியா பாரிகளை குறிவைத்து ஆளும் கட்சியினர் மற்றும் காவல்துறை யினர் துணையோடும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஆத்தூர், கெங்க வல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் தனி நெட்வொர்க் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் பெட்டிக் கடை, தள்ளுவண்டி கடை, ஜெராக்ஸ் கடை, மொபைல்போன் ரீசார்ஜ் கடைகளில், ‘ஒரு நம்பர் லாட்டரி’ காலை முதல் மதியம் வரை விற்பனை அமோகமாக நடை பெற்று வருகிறது. இதில் ஒரு துண்டு தாளில், கடைசி 3 இலக்க எண்களை மட்டும் எழுதி கொடுக் கின்றனர். மதியம் பணத்தை கட்டி சீட்டை வாங்கினால், மாலை முடிவு தெரிந்துவிடும். 50, 100, 200, 500 என விலைக்கு ஏற்ப பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த நூதன லாட்டரி சீட்டு விற்பனையில், தினசரி கூலி தொழிலாளர்கள் பணத்தை இழந்து, வாழ்வா தாரத்தை தொலைத்து வரு கின்றனர். இந்நிலையில் லாட்டரி விற் பனை குறித்து வீடியோ ஆதாரத் துடன் செய்தி வெளியான தையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆத்தூரை அடுத்த ங்கவல்லி பகுதியில் அதி காலையில் கூலி தொழிலாளர் களிடம் லாட்டரி சீட்டுகளை விற் பனை செய்து வந்த ஆத்தூரை சேர்ந்த சந்தோஷ் (29) என்கிற இளைஞரை கெங்கவல்லி காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப் புள்ள லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத் தனர்.