tamilnadu

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பேராசிரியர் மோசடி

 கோவை, செப்.10- தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் செவ்வாயன்று மாணவர்கள் அளித்த புகார் மனு வில்கூறியிருப்பதாவது, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைசேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் சென்னை  அமிர்தா கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது, அதே கல்லூரியில் பேராசிரியராக இருந்த ரமேஷ்பாபு  என்பவர், ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவ தாகக் கூறி அவரிடம் பணம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு படித்த 30 மாணவர்களிடம் இருந்து 2 மற்றும் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஆனால், மாணவர்கள் படிப்பை முடித்த பிறகும் கூட ரமேஷ்பாபு வேலை வாங்கி தரவில்லை. இதனையடுத்து  பணம் கொடுத்த மாணவர்கள் ரமேஷ்பாபுவிற்கு நெருக் கடி கொடுத்துள்ளனர், ஆனால் ரமேஷ்பாபு போலி யான கடிதம் கொடுத்து மாணவர்களை ஏமாற்றியுள் ளார். இதையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தலைமறைவாக இருக்கும் ரமேஷ்பாபுவை கைது செய்து பணத்தைப் பெற் றுத் தருமாறு மாணவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.