tamilnadu

img

கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

தஞ்சாவூர், பிப்.24- தஞ்சாவூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கரூர் மாவட்ட கராத்தே சங்கத் தலைவர் ஷிஹான் எஸ்.சரவணன் தலைமை வகித்தார். தாய் புடோ கான் கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் கே.பாண்டி யன் வரவேற்றார். புடோகான் கராத்தே சங்கத் தலைவர் எஸ்.வி.எஸ்.முருகேஷ் முன்னிலை வகித்தார். தொழிலதி பர் எஸ்.டி.டி.சிதம்பரம் போட்டியை துவக்கி வைத்தார்.  சிலம்பம், நுன்ஜாக் உள்ளிட்ட போட்டிகளில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி  பெற்றவர்களுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பரிசு வழங்கி பேசினார். முன்னதாக நடைபெற்ற தற்காப்புக்கலை விழிப்புணர்வு பேரணியை, சேதுபாவாசத்திரம் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளரும், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவருமான மு.கி.முத்துமாணிக்கம் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், பேராவூரணி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் நாடியம் சிவ.மதிவாணன், அம்மையாண்டி ஊராட்சி தலைவர் மல்லிகை வை.முத்துராமலிங்கம், அதிமுக நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், கோவி.இளங்கோ, எம்.எஸ்.நீல கண்டன், ராஜசேகரன், அனல் ரவீந்திரன் கலந்து கொண்டனர். நிறைவாக கைவனவயல் ஆசிரியர் என்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.