கோவை, பிப். 16- தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் தனியார் டேங் கர் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங் கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனி யார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வரு கிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பந் தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிக ளுடன் கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அன்று நள்ளிரவு முதல் ஆவின்டேங்கர் லாரிகள் வேலை நிறுத் தம்நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, கோவை மாவட்ட ஆவின் மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது: ஆவினுக்கு என சொந்தமாக 11 லாரிகள் உள்ளது. தவிர 8 லாரிகள் தனியார் பங்களிப் புடன் செயல்படுகிறது. இதில், 6 லாரிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. இரண்டு லாரிகள் தொடர்ந்து விநியோ கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.